தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு தடை நீக்கம் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, ஏழை எளிய மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, தடை நீக்கம் பெற்று, திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவை மாவட்டம் இருகூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய நலத்திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு தொடர்ந்து நல்ல முறையில் செயல்படுத்தி வருவதாக கூறினார். பிரசாரத்தின் போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி உடனிருந்தார்.

Exit mobile version