நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு: விஜய் மல்லையா மனு இன்று விசாரணை

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராகத் தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இன்று பிரிட்டன் உயர் நீதிமன்றம் தொடங்குகிறது.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குக் கடந்த 2016ஆம் ஆண்டு தப்பினார். அவரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மல்லையா கடன்களைத் திருப்பிச் செலுத்தாததற்கான ஆதாரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதால், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்தத் தடையுமில்லை என்று கடந்த 2018 தீர்ப்பளித்தது.

இதையடுத்து  நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், மல்லையா மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் மல்லையா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை பிரிட்டன் உயர் நீதிமன்றம் இன்று தொடங்குகிறது.

Exit mobile version