ராகுலை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை : முதலமைச்சர்

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக எதிர்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து காங்கேயத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், ராகுல் கந்தியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை என்று கூறினார். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கப்பட்டு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் மேலும் முன்னேற நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார்.

Exit mobile version