அதிமுக கூட்டணியை தகர்க்க எதிர்கட்சிகள் சதி

அதிமுகவின் வலுவான கூட்டணியை தகர்க்க எதிர்கட்சிகள் சதி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளர்.

சேலம் விமானநிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சரை பாமக மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அதிமுக புறநகர் மற்றும் மாநகர கழக நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து நிர்வாகிகளுடன் பேசிய அவர், மக்களவை தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்றும், அனைவரையும் வாக்களிக்க செய்ய நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version