முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி!!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கிடையாது என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு, பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில், NEP 2020 பெயரால் வரும் மும்மொழித் திட்டத்தை எதிர்த்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது என்றும், இருமொழிக் கொள்கையே தொடரும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும், பாட்டாளி மக்கள் கட்சி இதைத்தான் வலியுறுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version