தீவிரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க முடிவு

பதற்றமான சூழலில் காங்கிரஸ் தலைமையிலான 21 எதிர்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மேற்குவங்க முதலமைச்சர், மம்தா பான்ர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் மற்றும் ராணுவத்தின் பதில் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக கூறினார்.

Exit mobile version