அதிமுகவில் மூன்றாம் பாலினத்தவர் போட்டியிட வாய்ப்பு

அண்ணா திமுகவில் மூன்றாம் பாலினத்தவர் போட்டியிட வாய்ப்பு வழங்கிய கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு, திருநங்கை ஜெயதேவி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி தேர்தலில், அண்ணா திமுக சார்பில் போட்டியிட திருநங்கை ஜெயதேவிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தென்சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளரான திருநங்கை ஜெயதேவி, 112வது வார்டில் போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஜெயதேவி, அண்ணா திமுகவில் மூன்றாம் பாலினத்தவர் போட்டியிட வாய்ப்பு வழங்கிய கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தனக்கு ஒதுக்கிய வார்டில் வெற்றி பெற்று, மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து காட்டுவேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Exit mobile version