ஊடகங்கள் தவறான கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் அதனை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் காளியப்பனை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி, கருத்து கணிப்புகள் என்ற பெயரில் ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டினார். நம்முடைய உழைப்பும், உணர்வும், மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் கருத்தும்தான் வாக்குகளாகுமே தவிர, கருத்துக் கணிப்புகளை கவனத்தில் கொள்ள தேவையில்லை என தங்கமணி கூறினார்.