பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

பவானி சாகர் அணையில் இருந்து, தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை காலிங்கராயன் கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் நேற்று தண்ணீரைத் திறந்து வைத்தனர். இந்தத் தண்ணீரின் மூலம், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 43 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version