கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தார் அமைச்சர் சி.வி. சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கால்நடை கிளை மருத்துவமனையைச் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்து வைத்தார்.

கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட முதலியார் குப்பத்தில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

அதே ஒன்றியத்துக்குட்பட்ட குமளம், மாத்தூர், பாளையம் மாத்தூர், பி.எஸ் பாளையம் உள்ளிட்ட கிராம மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட, கால்நடை கிளை மருத்துவமனைக் கட்டடத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

Exit mobile version