முதலமைச்சர் உத்தரவுப்படி பாசன வசதிக்காக வைகை அணை திறப்பு

பாசன வசதிக்காக தேனியில் உள்ள வைகை அணையை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்.

பெரியாறு பாசனம் மற்றும் திருமங்கலம் கால்வாய் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன் படி, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி வீதம் நீரை திறந்து வைத்தார். இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நேரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதன் மூலம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. குறுகிய காலப் பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும் அதிக மகசூல் அடைய பொதுப்பணித் துறையுடன் ஒத்துழைக்குமாறு, விவசாயிகளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version