ராமநாதபுரத்தில் மீன்பிடித் துறைமுகம் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

114 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகத்தில் 250 விசைப் படகுகள் மற்றும் 350 நாட்டுப் படகுகள் நிறுத்துவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் வானிலை தகவல் தொடர்பு மையம், ஏலக்கூடம், மீனவர் ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இந்த புதிய துறைமுகத்தினால் எல்லை தாண்டி மீன் பிடிப்பது குறையும் எனத் தெரிவித்த மீனவர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

 

Exit mobile version