கோவையில் சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை குறிஞ்சி கார்டன் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 99 லட்சம் மதிப்பிலான சிறுவர் பூங்காவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திறக்கப்பட்டுள்ள, பூங்காவின் விளையாட்டு திடல், யோகா மையம் மற்றும் வன உயிரின சிற்பங்கள் உள்ளிட்டவைகளை அமைச்சர் பார்வையிட்டார். மேலும் பூங்காவினை அசுத்தப்படுத்தாமல், நல்ல முறையில் பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். அவருடன் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Exit mobile version