குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

ஈரோட்டில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

அணையில் சுமார் 3 மில்லியன் கன அடி நீர் உயர்ந்து காணப்படுவதால், அணையில் இருந்து வினாடிக்கு 23 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் வெளியேறுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version