மதுரையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தேர்தல் பணிமனை திறப்பு விழா

மதுரையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக கூட்டணி ஒரு கொள்கையற்ற கூட்டணி என விமர்சித்தார். மதுரையில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பதவிக்காக கூட்டணி வைத்திருப்பதாக வசைபாடினார்.

Exit mobile version