ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 9 பதக்கங்களை வென்ற அரசுப் பள்ளி மாணவிகள்

தென்னிந்திய அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 9 பதக்கங்களை வென்ற நாகை மாவட்டம், நாகக் குடையான் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலையில் தென்னிந்திய அளவிளான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட வேதாரண்யம், நாகக் குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்றதுடன், 9 பதக்கங்களையும் வென்றனர். பதக்கங்களை வென்று பள்ளிக்கு திரும்பிய மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி உட்பட பொதுமக்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்தனர். இந்த மாணவிகள் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Exit mobile version