தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து ட்விட்

மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உயிர்காக்கும் உன்னத சேவை புரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஊக்கத் தொகை வழங்க வேண்டுமென்று சில தினங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

கோரிக்கையினை ஏற்று ஊக்கத்தொகை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்

Exit mobile version