சின்மயி மன்னிப்பு கேட்டால் மட்டுமே டப்பிங் யூனியனில் இடம் : நடிகர் ராதாரவி

பாடகி சின்மயி மன்னிப்பு கேட்டால் அவரை மீண்டும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் சேர்த்து கொள்வோம் என சங்கத்தின் தலைவர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவரும், நடிகருமான ராதாரவி, விளம்பர பிரியராக இருக்கும் சின்மயி தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாகவும், தங்கள் மீது சின்மயி தவறான குற்றச்சாட்டை கூறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் எனவும் கூறினார்.

Exit mobile version