ஆன்லைனில் கேட்டது செல்போன்; வந்தது பழைய கடிகாரம்!

விருதுநகர் அருகே ஆன்லைனில் செல்போன் புக் செய்தவருக்கு, பழைய கைக்கடிகாரத்தை அனுப்பி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், மடத்துப்பட்டி கிராமத்தில் பஞ்சர் ஒட்டும் கடை வைத்திருப்பவர் சவுரி ராஜன். கடந்த மாதம் 31ஆம் தேதி ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சவுரி ராஜனுக்கு வந்த பார்சலில் செல்போனுக்குப்பதில் ஓர் பழைய கடிகாரம், ஒரு சார்ஜர், ஓர் அடாப்டர் ஆகியவை இடம்பெற்றிருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Exit mobile version