திருவண்ணாமலையில் , 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன்தேர்வு..

ஊரடங்கு காலத்தைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இரண்டாம் சிறப்பு ஆன்லைன் தேர்வினை, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆன்லைன் தேர்வில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சில மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியும், வேறு சிலர், இ சேவை மையங்கள் மூலமும் ஆன்லைன் தேர்வில் பங்கேற்றனர்.  

Exit mobile version