ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீக்க உத்தரவு நீட்டிப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மார்ச் 20 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு , தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதிய விதிகளை அறிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதுவரை, ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு விதித்த தடையை நீக்கிய உத்தரவையும் நீதிபதிகள் நீட்டித்து உத்தரவிட்டனர்.

Exit mobile version