பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் 12ம் தேதி முதல் துவக்கம்!!

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் 12ம் தேதி முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் வரும் 12ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகளை துவங்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதலாமாண்டை தவிர்த்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகளை துவங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் அக்டோபர் 26ம் தேதி வரை நடத்தப்படும் எனக் கூறியுள்ள அண்ணா பல்கலைக்கழகம், அக்டோபர் 28ம் தேதி முதல் செயல்முறை தேர்வுகள் துவங்கும் எனத் தெரிவித்துள்ளது. நவம்பர் 9ஆம் தேதி செமஸ்டர் தேர்வுகள் துவங்கும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version