தமிழகம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளங்கலை இரண்டாம் ஆண்டு, 3ம் ஆண்டு வகுப்புகள், எம்.சி.ஏ 2ம் ஆண்டு வகுப்புகள், முதுகலை இரண்டாம் ஆண்டு படிப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. மாணவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் வகுப்பில் அவர்களது வருகையை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறையில் அதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்கு ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகளையும், கல்லூரி நிர்வாகம் செய்து தர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Exit mobile version