குன்னூரில் காட்டெருமை தாக்கி ஒருவர் படுகாயம்

குன்னூரில் காட்டெருமை தாக்கியதால் தொழிலாளி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

உதகை மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் ஆனந்த் . இவர் குன்னூர் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் நின்றிருந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த வின்சென்ட் ஆனந்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குன்னூர் பகுதியில் பொதுமக்களை தாக்கி வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version