“விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்” – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உரை!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமலம் அருகே உள்ள கே. புதுப்பட்டியில் புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டார். இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சி. விஜய பாஸ்கர் தொண்டர்களிடையேயும் மக்களிடையேயும் சிறப்பு உரை ஆற்றினார்.

பொதுக்கூட்டத்தில் உரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் அவர்கள், இந்த விடியாத திமுக ஆட்சி பொறுப்பேற்ற சிறுது காலத்தில் மக்களிடையே வெறுப்பைச் சேர்த்துள்லது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அவர்கள் திமுக பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி வருகிறது என்று குறிப்பிட்டார். குறிப்பாக, திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குவதாக பொய் வாக்குறுதிக் கூறி அதனை நிறைவேற்றாமல் இருப்பது பெண்களின் மத்தியில் திமுக மீது வெறுப்பு எழுந்துள்ளது. திமுகவைத் தவிர்த்துவிட்டு தொடர்ந்து அண்ணா திமுகவின் ஆட்சி, புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி வரும் என்று முன்னாள் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். மேலும் ’விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நடைமுறைக்கு வரும் அந்தத் தேர்தலில் நமது அதிமுக வெற்றிபெறும் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version