குழந்தைகளை விற்ற விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

நாமக்கல் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகளை விலைக்கு விற்ற வழக்கு தொடர்பாக மேலும் ஒரு பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்றதாக ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னதாக அமுதா உள்ளிட்ட மூன்று பேரை 7 நாட்கள் சிபிசிஐடி போலீசார் வசம் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி செவிலியராக பணிபுரியும் சாந்தி என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Exit mobile version