குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீசார்

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

70வது குடியரசு தின விழா வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.இந்தநிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உஷார் நிலையில் இருக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version