ஒரு கிலோ மல்லி ரூ.1800 க்கு விற்பனை

கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்ததால் சத்தியமங்கலம் மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகை பூ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்திய மங்கலத்தில் உள்ள மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு மகசூல் கணிசமாக குறைந்தது. இதனால் சத்தியமங்கலம் மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகை பூ 1800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Exit mobile version