திருச்சியில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

திருச்சியில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி கே.கே நகர் உடையான்பட்டி ரயில்வே கேட் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையிலிருந்து வந்த லோடு ஆட்டோ வாகனத்தை சோதனை செய்ததில் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வாகனத்தையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version