கோவில் தெப்பக்குளத்தில் குளித்து கொண்டிருந்தவர் உயிரிழப்பு

தருமபுரியில் கோவில் தெப்பக்குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் தயாநிதி, இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நீச்சல் தெரியாத தயாநிதி முருகன் கோவில் தெப்பக்குளத்தில் குளித்துக்கொண்டிருந்தார்.நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குளத்தில் இறங்கி தயாநிதியின் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோயில் தெப்பகுளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version