திரிபுராவில் 880 கிலோ கஞ்சா பறிமுதல்

திரிபுராவில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய வாகனச் சோதனையின்போது 880 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர். திரிபுராவின் பாணிசாகர் என்னுமிடத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் புலனாய்வுப் பிரிவினர் வாகனங்களை மறித்துச் சோதனை செய்தனர். அப்போது ஒரு லாரியில் 88 மூட்டைகளில் இருந்த 880 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இவற்றின் சந்தை மதிப்பு 75 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது. கஞ்சாவைக் கடத்திய வாகனத்தின் ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version