சாலையில் நின்ற கன்றுக்குட்டியை மோதிச்சென்ற வாகனத்தால் பரபரப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து சாலையில் துடித்துக்கொண்டிருந்த கன்றுகுட்டியை, தாய்ப்பசு சுற்றிச்சுற்றி வந்து கத்தியது, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி பூங்கா வாயிலின் முன்பு சாலையில் பசுமாட்டுடன் சென்ற கன்றுகுட்டியை அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றது. இதில் அந்த கன்றுகுட்டியில் கால் எழும்பு உடைந்து சாலையில் பரிதவித்துக் கொண்டிருந்தது.
அடிபட்டு உயிருக்கு போரடிய கன்றுகுட்டியின் அருகே, தாய்ப் பசு கத்தியபடி சுற்றி சுற்றி வந்தது அனைவரையும் கண் கலங்கச் செய்தது. இதனைக் கண்ட கிருஷ்ணக்குமார் என்பவர், அந்த கன்றுக் குட்டியை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து, சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக கால்நடைகளை விடுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version