பாஜக ஆட்சியில் ஒரு புறம் காலியிடம், மறுபுறம் வேலைவாய்ப்பின்மை

ரயில்வேயில் வேலை வாய்ப்பு என பாஜக அரசு மக்களை ஏமாற்றுவதாக ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரயில்வேயில் புதிதாக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்திருந்தார். மேலும் 1 லட்சத்து 51 ஆயிரம் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நடவடிக்கை தொடங்கி விட்டதாகவும் அவர் கூறினார். பாஜக அரசின் இந்த அறிவிப்பை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஏமாற்று வேலை என டிவிட்டரில் விமர்சித்துள்ளார். நான்கரை ஆண்டுகளாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணியிடங்களை காலியாக வைத்த பாஜக அரசு, திடீரென விழித்துக்கொண்டு அடுத்த 3 மாதங்களில் நிரப்புவதாக கூறுவதா என கேட்டுள்ளார். பாஜக ஆட்சியில் ஒரு புறம் காலியிடமும் மறுபுறம் வேலைவாய்ப்பின்மையும் இருப்பதாக ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version