புத்தாண்டை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் சிறப்பு அலங்காரம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கண்கவர் வகையில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

கோயிலின் உட்புறம், மதில் சுவர், சுற்றுவட்டார பகுதிகளிலும், பக்தர்கள் அதிகளவில் கூடும் முக்கிய பகுதிகளிலும், பல்வேறு வகையான மலர்களைப் பயன்படுத்தி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மனம் கவரும் வகையில் சரவிளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டை முன்னிட்டு அதிகளவில் பக்தர்கள் வருகை புரிந்துள்ளதால், மருத்துவம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தாரளமாக கிடைக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Exit mobile version