தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் யானைகளின் கூட்டம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ள சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. தண்ணீருக்காகவும், உணவிற்காகவும் சாலையில் சுற்றி திரிகின்றன. சில சமயங்களில் வாகன ஓட்டிகளை துரத்தவும் செய்கின்றன.

இதன் காரணமாக, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், யானைகள் கூட்டமாக இருக்கும் போது வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம் எனவும், கூச்சலிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை ஒருவரை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version