தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றைக் காட்டு யானை: வாகன ஓட்டிகள் பீதி

ஈரோட்டில், பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து நின்ற ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

தாளவாடி அடுத்த பெங்களூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காட்டு யானைகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். அந்த வகையில், கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டிருந்தது. சாலையோரமாக நின்றுக் கொண்டிருந்த காட்டு யானை, திடீரென சாலைகளில் சென்ற வாகனங்களை வழிமறித்ததது.

Exit mobile version