தாயின் காலில் கத்தியால் குத்திய மகன்

ஒட்டன்சத்திரத்தில் புகைபிடிப்பதை தட்டிக்கேட்ட தாயின் காலில் கத்தியால் குத்திய மகன் , வழக்கிற்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற நபர் தனது தாய் தந்தைக்கு தெரியாமல் புகை மற்றும் மது அருந்தி வந்துள்ளார். இதனையறிந்த சூர்யாவின் தாய் கனேஸ்வரி தனது மகனைத் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சூர்யா தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாய் கனேஸ்வரியின் காலில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்நிலையில், தனது தாயைக் கத்தியால் குத்தியது பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள் என்ற பயத்தில் சூர்யா தனது வீட்டிலேயே தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version