திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி வேன் தீப்பற்றி எரிந்தது 

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மாருதி ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணச்சநல்லூர் அருகே நொச்சியத்தை சேர்ந்த சிவகுமார் தனது ஆம்னி மாருதி வேனில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சமயபுரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆறு புதிய பாலத்தில் சென்ற போது வேனில் புகை கிளம்பி திடீரென தீப்பற்றி கொண்டது. சுதாகரித்துக் கொண்ட சிவகுமார் வேனை விட்டு கீழே இறங்கியதால் விபத்திலிருந்து உயிர் பிழைத்தார்.

இந்த தீவிபத்து குறித்த தகவலறிந்த திருச்சி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர். இதனால் சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

Exit mobile version