உள்ளாட்சி தேர்தலுக்கு முதல் நாளிலேயே 3,217 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 3 ஆயிரத்து 217 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையொட்டி, 9 ஆம் தேதி முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. மேலும், வரும் 16-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பெறப்படுகிறது. அதன்படி, முதல் நாளில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்து 217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 834 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 333 பேரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ தகவலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Exit mobile version