தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு குறையத் தொடங்கியது

நெல்லை மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைந்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறையத் தொடங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் பாபநாசம் அணை நிரம்பியது. இதனையடுத்து பாபநாசம் அணையில் இருந்து 14 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால், கடந்த 4 நாட்களாகத் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனையடுத்து மழை குறையத் தொடங்கியதால், அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையத் தொடங்கியுள்ளது.

Exit mobile version