வரும் 21 ம் தேதி 4 தொகுதிகளுக்கு விருப்ப மனு- அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு வரும் 21 ம்தேதி விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே மாதம் 19 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 21ம் தேதி இந்த 4 தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version