தமிழகத்தில் மே 3ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு

தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் வரும் 19ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி 38 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தநிலையில், மாதிரி வாக்குப்பதிவுடன் சேர்த்து, வாக்குப்பதிவு நடந்ததாக கூறி, 46 வாக்குச்சாவடிகளில் தவறு நிகழ்ந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி அதிகபட்சமாக தருமபுரியில் உள்ள நத்தமேட்டில் 4 வாக்குச் சாவடியிலும், அய்யம்பட்டியில் 2 வாக்குச்சாவடியிலும், ஜாலிபுதூரில் 2 வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோட்டில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Exit mobile version