ஜனவரி 3-ம் தேதி மேகேதாட்டு அணை முற்றுகை போராட்டம்- பி.ஆர்.பாண்டியன்

திட்டமிட்டபடி ஜனவரி 3-ம் தேதி மேகேதாட்டு அணை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய பி.ஆர்.பாண்டியன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் பேரழிவை சந்திக்கும் என்று கூறினார். இதனை கண்டித்து ஜனவரி 3-ம் தேதி திட்டமிட்டபடி மேகேதாட்டு அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் விவசாயம் அழிந்து வருவதால் என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணியை கைவிட வேண்டும் என கூறிய அவர்,100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கீழணை பலமிழந்து நிற்பதால் மாற்று அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version