பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் தனித் தனியாக அழைப்பு விடுத்துள்ளனர்.

பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்க உள்ளது. இந்நிலையில், அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பது குறித்து விவாதிக்க வரும் 30 ஆம் தேதி அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது குறித்து 31ஆம் தேதி அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணை தலைவருமான வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். பிப்ரவரி 13ம் தேதிவரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version