காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பில் குளம் தூர்வாரும் பணி

காரைக்காலில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பில் குளத்தை தூர்வாரும் பணியை துணை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுப்பணித்துறை மூலம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் உள்ளிட்டவைகள் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பில் கீழகாசாகுடி பகுதியில் உள்ள வாத்திகுளம் என்ற குளத்தினை தூர்வார முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கியுள்ளது. அதனை, துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் துவக்கி வைத்தார். பொதுப்பணித் துறை ஊழியர்கள், தீயணைப்பு துறை ஊழியர்கள் என பல்வேறு அரசுத்துறைகளைச் சார்ந்த ஊழியர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version