அஇஅதிமுக சார்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்

அஇஅதிமுக சார்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கடங்களையும், தடைகளையும் நீக்கவல்ல விநாயகப் பெருமானை வணங்கினால், நல்ல சொல் வளம், பொருள் வளம், மன வளம், உடல் நலம் ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும் என தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் இல்லங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். விநாயகப் பெருமானின் அருளால், நாடெங்கும், நலமும், வளமும் பெருகவும், இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கவும், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version