அதிமுக சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

அதிமுக சார்பாக சென்னை கீழ்பாக்கத்திலுள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற கிறஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பங்கேற்றனர்.

சென்னை கீழ்பாக்கத்திலுள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் அதிமுக சார்பாக கிறஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துக் கொண்டனர். புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்று இறை வழிபாடு செய்தனர். இதனையடுத்து, தேவலாயத்திற்கு அருகிலுள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்றவோர்களுடன் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கருணை இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்றவோர்களுடன் கலந்து உரையாடிய ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Exit mobile version