மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஓம் பிர்லா வேட்பு மனு

மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஓம் பிர்லா வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

17வது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, 2வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றார். இந்நிலையில் மக்களவை சபாநாயகர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஓம் பிர்லா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் ஓம் பிர்லாவை முன்மொழிந்தனர். ராஜஸ்தான் மாநில கோட்டா மக்களவை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் ஓம் பிர்லா என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version