சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

மதுரையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மதுரை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்ற முதியவர் அதே பகுதியில் உள்ள இரண்டு சிறுமிகளை 2018 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து, முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முத்தையாவுக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Exit mobile version