பாடியில் நடைபயிற்சி சென்ற முதியவரிடம் 6 சவரன் நகை பறிப்பு

சென்னை பாடியில் நடை பயிற்சி சென்ற முதியவரை ஆட்டோவில் கடத்தி 6 சவரன் நகையை பறித்துச் சென்ற இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கொரட்டூர் அருகிலுள்ள பாடியை சேர்ந்த கோபிநாத் என்ற முதியவர் அதே பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த இருவர் அவரிடம் வழி கேட்பது போல ஆட்டோவில் கடத்திச்சென்றனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 சவரன் நகையை பறித்து சென்றனர். . இச்சம்பவம் குறித்து கண்காணிப்பு பதிவுகளை ஆய்வு செய்த கொரட்டூர் போலீசார், மகேஷ், விஜி ஆகிய இருவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த 3 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version